சோளிங்கர் அருகே சதித் திட்டம் தீட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சோளிங்கர் உதவி ஆய்வாளர் மகாராஜன் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு சோளிங்கர், பேருந்து நிலையம், செங்கல்நத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செங்கல்நத்தம் பேருந்து நிறுத்த சாலையோரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில், நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஜனகராஜ் (21) , பெருமாள் (24) என்பதும், அவர்கள் அவ்வழியாக வரும் பேருந்துகள் மீது கற்களை வீசித் தாக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.