நீதிமன்ற கட்டுமானப் பணிகள் தொடக்கம்
அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ. 4.71 கோடியில் கட்டப்பட உள்ள இரு சார்பு நீதிமன்றக் கட்டடங்கள்
அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ. 4.71 கோடியில் கட்டப்பட உள்ள இரு சார்பு நீதிமன்றக் கட்டடங்கள், நீதிபதிகள் குடியிருப்பு கட்டுமானப் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அரக்கோணம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆர்.ரவி தலைமை வகித்தார். செயலாளர் என்.தமிழ்மாறன் வரவேற்றார். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பணியைத் தொடங்கி வைத்தார். விழாவில்
நில ஆர்ஜித வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி கே.அமுதா, அரக்கோணம் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி லாவண்யா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.தமிழ்செல்வி, அரசு வழக்குரைஞர்கள் வீரராகவன், லோகாபிராமன், தியாகராஜன், மத்திய அரசு வழக்குரைஞர் தனசேகர், மூத்த வழக்குரைஞர்கள் ரமணி, பாலதிருவேங்கடம், நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.