வேலூர்

டிராக்டர் மோதியதில் மின் கம்பம் சேதம்

DIN

வாணியம்பாடியில்  டிராக்டர் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது. இதில்  பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக   தப்பினர். 
வாணியம்பாடி கச்சேரி ரோடு-ஆசிரியர்நகர் சாலையில்   புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து  மின் கம்பத்தின் மீது மோதியது.  இதில் மின் கம்பம் உடைந்து  மின் கம்பிகள் கீழே தொங்கின. அப்போது அவ்வழியாக நடந்து சென்ற பொதுக்கள்  அலறியடித்து  ஓடினர்.  
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தவுடன், அதிகாரிகள்  மின் விநியோகத்தை  துண்டித்தனர்.  இதையடுத்து மின் ஊழியர்கள்,  சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை பொருத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

போடி அருகே வனப் பகுதியில் காட்டுத் தீ

அருளால் இறைவனை அறிய வேண்டும்: சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா

மேகாலயாவில் ரோல்பால் போட்டி தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

SCROLL FOR NEXT