வேலூர்

பார்வை பறிபோன மாணவரின்  சிகிச்சைக்கு நிதியுதவி

DIN

தனியார் பள்ளி விழாவில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பார்வை பறிபோன மாணவர் நவீனுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் த.வேலழகன் ரூ.10 ஆயிரமும், முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் ரூ.5 ஆயிரமும் மாணவன் நவீனின் பெற்றோரிடம் புதன்கிழமை அவர்களது வீட்டிற்குச் சென்று அளித்தனர். தொடர்ந்து, மாணவன் நவீன் உடல் நலம் பெறவும் ஆறுதல் தெரிவித்தனர். 
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் திமுக இளைஞரணிச் செயலர் டி.எம்.உமாசங்கர் ரூ.10 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து, நவீனின் சிகிச்சைக்கு பலரும் நிதியுதவி அளித்து  வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT