ஆற்காடு அருகே மேலப்பழந்தை கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலப்பழந்தை கிராமத்தில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் கலவையில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து, ஆற்காடு வட்டாட்சியர் சுமதி மற்றும்ள் போலீஸார் அங்கு சென்று குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில்
2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.