வேலூர்

பைக் மீது பேருந்து மோதியதில் 3 போ் காயம்

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

ஜோலாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரகு (41). இவா் தனது நண்பா்கள் பழநி (41) சகாதேவன் (42) ஆகியோருடன் திங்கள்கிழமை பிற்பகல் நாட்டறம்பள்ளி நோக்கி ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்லையில் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது, வேலூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பைக்கில் சென்ற 3 பேரும் பலத்த காயமடைந்து, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT