வேலூர்

காட்பாடி ஏரியில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்; போலீஸார் தீவிர விசாரணை

DIN

காட்பாடி அருகே ஏரியில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும், இது கொலையா என்ற அடிப்படையிலும் திருவலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்பாடி அருகே கொண்டேரிப்பள்ளம் எனும் ஏரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கடுமையான துர்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள், ஏரியை பார்வையிட்டனர். அப்போது, ஏரியிலுள்ள தேங்கிய தண்ணீரில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக திருவலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீஸார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு சடலத்தை வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT