மாநில அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்த குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
மாநில அளவிலான கபடி போட்டிகள் வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.
இதில், குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து, கோப்பை, சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை வென்றனர்.
இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சாதனை படைத்த மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சி. கேசவன், இ. பலராமன், எம்.எஸ். சிவராமகிருஷ்ணன் ஆகியோரையும் பள்ளி நிர்வாகிகள் கே.எம்.ஜி. சுந்தரவதனம், கே.எம்.ஜி. ராஜேந்திரன், தலைமையாசிரியர்
கோ. புருஷோத்தமன் ஆகியோர் பாராட்டினர்.