குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியை ஜெனீபர் பிலிப் தலைமை வகித்தார். ஆசிரியர் எம். சுந்தரமூர்த்தி வரவேற்றார். சென்னை சவிதா மருத்துவப் பல்கலைக்கழக சிறுநீரகவியல் துறைத் தலைவர் சௌந்தரராஜன், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆகியோர் கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இதில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ராணி நன்றி கூறினார்.