வேலூர்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை

DIN

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டர். 
வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு  வட்டாரப் போக்குவரத்து அலுவலராக அசோகன் பணியாற்றினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையைச் சேர்ந்த 3 போலீஸார் புதன்கிழமை வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அப்போது 2015-ஆம் ஆண்டில் எடுத்துச் செல்லப்பட்ட சில ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT