வேலூர்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டர். 

DIN

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டர். 
வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு  வட்டாரப் போக்குவரத்து அலுவலராக அசோகன் பணியாற்றினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையைச் சேர்ந்த 3 போலீஸார் புதன்கிழமை வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அப்போது 2015-ஆம் ஆண்டில் எடுத்துச் செல்லப்பட்ட சில ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT