வேலூர்

தர்மராஜா கோயில்  மகா கும்பாபிஷேகம்

DIN

கார்ணம்பட்டு தர்மராஜா சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கலசப் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மாகாதேவ மலை மகானந்த சித்தர், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, கோயில் கோபுரக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 
பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் கார்ணம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கார்ணம்பட்டு, ஆழ்வார்த்தாங்கல் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT