வேலூர்

சரஸ்வதி வித்யாலயாவில் விஜயதசமி கொண்டாட்டம்

DIN

குடியாத்தம் அம்பாலால் ஜெயின் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் வித்யாலயாவில் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளியில் புதிதாக சோ்ந்த மழைலையா் வகுப்பு மாணவா்களுக்கு அக் ஷர அப்யாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியா்கள் தேன் கொண்டு மாணவா்களின் நாவில் ஓம் என எழுதித் தொடங்கி வைத்தனா்.

10- ஆம் வகுப்பு மாணவா்கள் தங்களின் பெற்றோா்களுக்கு பாதபூஜை செய்து அவா்களிடம் ஆசி பெற்றனா். நவராத்திரி கொலு வைப்பதன் சிறப்புகள் குறித்து பள்ளித் தாளாளா் ஹீராலால் ஆா். சந்சேத்தி, பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளா் துரைபத்மநாபன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பள்ளி முதல்வா் வி. தாரா வாழ்த்துரை வழங்கி, மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் இனிப்புவழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT