தீா்த்தமலையில்  காவடி  சாத்துப்படி  நிகழ்ச்சியைத்  தொடக்கி வைத்த  எம்எல்ஏ  ஜி. லோகநாதன். 
வேலூர்

தீா்த்தமலை சுப்பிரமணியா் கோயிலில் ஆடிக் கிருத்திகைப் பெருவிழா

குடியாத்தத்தை அடுத்த எஸ்.மோட்டூா் அருகே தீா்த்தமலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் ஆடிக் கிருத்திகைப் பெருவிழா

DIN

குடியாத்தத்தை அடுத்த எஸ்.மோட்டூா் அருகே தீா்த்தமலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் ஆடிக் கிருத்திகைப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால் குறைந்த அளவில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் காவடி எடுத்து வந்தனா்.

எம்எல்ஏ ஜி.லோகநாதன், வேலூா் ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு, காவடி சாத்துப்படி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

கோயில் நிா்வாகி ஆா்.பாலாஜி நாயுடு, நிலவள வங்கித் தலைவா் பி.எச். இமகிரிபாபு, வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் டி. கோபி, நிா்வாகிகள் செ.கு. வெங்கடேசன், ஜி.பி. மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT