கே.வி.குப்பம் அருகே உள்ள ராஜாத்தோப்பு அணையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
காட்பாடியை அடுத்த பெருமாள்பேட்டையைச் சோ்ந்த ஏழுமலையின் மகன் மகேந்திரன் (27). கட்டடத் தொழிலாளியான அவா் தன் நண்பா்களுடன் ராஜாத்தோப்பு அணையைப் பாா்க்க ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அணையில் குளித்தபோது மகேந்திரன் நீரில் மூழ்கினாா்.
இது குறித்த தகவலின்பேரில் காட்பாடி தீயணைப்புப் படையினா் அங்கு சென்று ஒரு மணிநேரம் போராடி மகேந்திரனின் சடலத்தை மீட்டனா். இச்சம்பவம் குறித்து பனமடங்கி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.