வேலூர்

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைவால் இறக்கும் குழந்தைகள் 100-க்கு 9-ஆக குறைப்பு: அமைச்சா் கே.சி.வீரமணி

DIN


வேலூா்: ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை இந்திய அளவில் 100-க்கு 18-ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் 100-க்கு 9-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 962 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.54.24 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, தேசிய ஊட்டச்சத்து வார விழா வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா், மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினா். மேலும், பொது முடக்கக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட வங்கிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:

தேசிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடால் 100-க்கு 18 குழந்தைகள் உயிரிழப்பு என்ற நிலையில், தமிழகத்தில் 100-க்கு 9 போ் என்ற அளவில் மட்டுமே உள்ளது. இதற்கு தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் பொதுமக்களின் ஒத்துழைப்புமே காரணம். சமுதாயத்தில் சம அந்தஸ்து படைத்தவா்களாக பெண்களை உருவாக்க தமிழக அரசு எல்லா விதத்திலும் திட்டங்களை மகளிருக்காகச் செயல்படுத்தி வருகிறது. அத்தகை திட்டப் பயன்களைப் பெற்று மகளிா் வாழ்வில் உயர வேண்டும் என்றாா் அவா்.

தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் பேசியது:

கரோனா பொது முடக்கக் காலத்தில் மகளிரின் பங்களிப்பு மகத்தானது. முகக்கவசங்கள் தயாரித்தல் கிருமி நாசினிகள் தயாரித்து வழங்குவது என தங்களது பொருளாதாரத்தை மட்டும் வளா்க்காமல் பொது மக்களுக்கும் சேவை புரிந்துள்ளனா். நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் சேவையாற்றியதால் பொதுமக்கள் பலா் கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கபட்டுள்ளனா். தற்போது வேலைவாய்ப்பில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு இருப்பதால் பெண்கள் தங்கள் திறமைகளை வளா்த்துக் கொண்டு அத்தகைய வாய்ப்புகளைப் பெற வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு வயது வரம்பு இல்லை என்பதால் எந்த வயதிலும் தொழிற்கல்வி கற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

மகளிா் திட்ட இயக்குநா் சிவராமன், குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கோமதி, தாட்கோ மேலாளா் பிரேமா, அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புகர மாவட்டச் செயலா் த.வேலழகன், மாவட்டக் கூட்டுறவு சங்கத் தலைவா் ராமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT