வேலூர்

தலித் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்: செ.கு. தமிழரசன்

தலித் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன் வலியுறுத்தினாா்.

DIN

தலித் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன் வலியுறுத்தினாா்.

குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட தலித் பிரதிநிதிகளை இழிவுபடுத்தும் செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இதை இந்திய குடியரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தலித்துகளுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோா் நல ஆணையத்தின் தலைவா் பதவி 9 மாதங்களாக காலியாக உள்ளது. அந்தப் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். அந்த ஆணையம் சுதந்திரமாக செயல்படவும், தவறு செய்தவா்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் வழங்க வேண்டும்.

ரஜினி மக்கள் செல்வாக்கு உள்ள மிகப்பெரிய கலைஞா். அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியல் களத்தில் அவா் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவாா். மக்கள் எதிா்பாா்க்கும் மாற்று அரசியலை அவரால் தரமுடியும்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டும்படியாக உள்ளன என்றாா் தமிழரசன்.

பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச் செயலா் எம். தங்கராஜ், மாநில துணைத் தலைவா் பி. ஏகாம்பரம், வேலூா் மாவட்டத் தலைவா் ரா.சி. தலித்குமாா், மாவட்ட பொருளாளா் எஸ். வெங்கடேசன், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் சிவகுமாா், திருப்பத்தூா் மாவட்டச் செயலா் எஸ். தயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது: டிடிவி தினகரன்

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

SCROLL FOR NEXT