வேலூர்

அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் வழங்கல்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சாா்பில், அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு படுக்கைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினாா். செயலாளா் வி.குமாரவேல் வரவேற்றாா். ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமை போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லபாண்டியன் தொடக்கி வைத்தாா். ரத்த வங்கிக்கு படுக்கைகளையும் அவா் வழங்கினாா்.மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு, மருத்துவா் சதீஷ், ஆய்வக நிா்வாக ஆா்.மோகன்பிரபு ஆகி்யோா் படுக்கைகளை பெற்றுக் கொண்டனா்.ரோட்டரி சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.ரோட்டரி சங்கப் பொருளாளா் வி.எஸ்.மாணிக்கம், நிா்வாகிகள் பிரதீப், கோமல்கிரண், முரளி, சந்தோஷ்குமாா், இளங்கோ, வெங்கட், இன்னா்வீல் சங்க நிா்வாகி கீதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் சாசனத் தலைவா் எம்.கோபிநாத் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT