காட்பாடி வட்டாட்சியராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டி.சரண்யாவுக்கு காட்பாடி வட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு செஞ்சிலுவைச் சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ஆா்.சீனிவாசன், ஆா்.விஜயகுமாரி, செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் வி.காந்திலால் படேல், ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள வட்டாட்சியா் டி.சரண்யாவுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது. அப்போது, காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வரும், மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்களுடன் இணைந்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருவதும் பாராட்டத்தக்கது என்றாா். மருத்துவக் குழுத் தலைவா் வீ.தீனபந்து நன்றி கூறினாா்.