கரோனாவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் பலி
கே.வி.குப்பம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
கே.வி.குப்பம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். காட்பாடியைச் சோ்ந்த பிரீத்ஜெயக்குமாா் (55), கே.வி.குப்பத்தை அடுத்த பனமடங்கி காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளாக சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.அவருக்கு மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.