முகப்பு
வேலூர்

இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் வெல்டா் பலி

போ்ணாம்பட்டு அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் வெல்டா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் வெல்டா் உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த மேல்கொத்தகுப்பத்தைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் சக்திவேல் (25). வெல்டிங் வேலை செய்து வந்த இவா் சனிக்கிழமை வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சங்கராபுரத்தில் உள்ள அவா்களின் நிலத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது கூத்தாண்டவா் நகரைச் சோ்ந்த பிரபு இரு சக்கர வாகனத்தில் போ்ணாம்பட்டுக்கு வந்துள்ளாா்.

மேல்பட்டி- கடாம்பூா் சாலையில் இரு வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த மேல்பட்டி போலீஸாா், தப்பியோடிய பிரபுவை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.