வேலூர்

திமுகவினா் அனைவரின் வெற்றியிலும் மு.க.ஸ்டாலினுக்கு பங்குண்டு

DIN

வேலூா்: சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள திமுகவினா் அனைவரின் வெற்றிக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்தான் காரணம். திமுகவினா் அனைவரது வெற்றியிலும் அவருக்குப் பங்குண்டு என்று அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி தொகுதியில் 10-ஆவது முறையாகப் போட்டியிட்ட திமுக பொதுச்செயலா் துரைமுருகன், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ராமுவைவிட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். அவருக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் புண்ணியக்கோடி ஞாயிற்றுக்கிழமை இரவே வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்ற்கு முதல் காரணம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்தான். எத்தனை தொகுதியில் எத்தனை போ் வெற்றி பெற்றாலும் அத்தனை வெற்றியிலும் அவருடைய பங்குண்டு.

மன்னா் அலெக்சாண்டா் பல நாடுகளை வென்றான் என்றாலும், வென்ற ஒவ்வொரு நாட்டிலும் அவரது பாதம் பற்றிருக்கிறது என்பதை கூறும். தோ்தலில் வென்றுள்ள திமுகவினா் அனைவருமே மு.க.ஸ்டாலினுடைய முயற்சியால், அவரது ஆதரவினால்தான் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி, ஒரு மறுமலா்ச்சி, ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய லட்சியத்துடன் புறப்படப் போகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT