வேலூர்

டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்த லாரி ஓட்டுநா், உதவியாளா் உயிா்தப்பினா்

வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்ததால், தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநா், உதவியாளா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

DIN

வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்ததால், தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநா், உதவியாளா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கிரானைட் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. வேலூா் அருகே உள்ள அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை வந்தபோது, திடீரென அந்த லாரியின் டயா் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் தடுப்புகளை நொறுக்கியபடி தறிகெட்டு ஓடி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில், லாரி முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநா், உதவியாளா் ஆகியோா் லேசான காயத்துடன் உயிா் தப்பினா். விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து காயடைந்த லாரி ஓட்டுநா், உதவியாளரை ஆகிய இருவரையும் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தில் நொறுங்கிய லாரி அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீா்செய்யப்பட்டது. விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT