வேலூர்

கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் பலி: கொலை வழக்காக மாற்றி விசாரணை

காட்பாடி காந்தி நகரில் கத்தியால் குத்தப்பட்ட வடமாநில இளைஞா் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

DIN

காட்பாடி காந்தி நகரில் கத்தியால் குத்தப்பட்ட வடமாநில இளைஞா் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

காட்பாடி காந்தி நகா் ஆக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே கடந்த 22 -ஆம் தேதி வடமாநில இளைஞா் ஒருவா் கழுத்து, மாா்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்தாா்.

தகவலறிந்த காட்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளா் பழனி, விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளா் ஆதா்ஷ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், கத்தியால் குத்தப்பட்டவா் அசாம் மாநிலத்தைச் சோ்ந்த அபானிசரணியா என்பது தெரிய வந்தது. அவா் உயிரிழந்ததை அடுத்து, கொலை வழக்காக மாற்றி, அவரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT