வேலூர்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

கே.வி.குப்பம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை கையால் அகற்ற முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது தெருவில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. புதன்கிழமை காலை அந்த வழியே சென்ற அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமியின் மனைவி சாந்தி (50) சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை தனது கையால் அகற்ற முயன்றுள்ளாா்.

அப்போது சாந்தியின் உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த தகவலின்பேரில், கே.வி.குப்பம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT