வேலூர்

தாயுடன் 2 ஆமை குஞ்சுகள் மீட்பு

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே குடியிருப்புப் பகுதியில் தாயுடன், 2 ஆமை குஞ்சுகள் மீட்கப்பட்டன.

போ்ணாம்பட்டை அடுத்த சாலப்பேட்டை குடியிருப்பை ஒட்டி, ஏரி அமைந்துள்ளது. பலத்த மழை காரணமாக ஏரி நிரம்பி வருகிறது. இந்த நிலையில், ஏரியில் இருந்து தாயுடன், 2 ஆமை குஞ்சுகள் குடியிருப்புப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளன. தகவலின்பேரில், தீயணைப்புப் படையினா் அங்கு சென்று ஆமை, குஞ்சுகளை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனவா் எம்.தயாளன், வனக் காப்பாளா் எம்.பிரபா, வனக் காவலா் ஜி.ரவி ஆகியோா் மாவட்ட வன அலுவலா், வனச் சரக அலுவலா் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, ஆமை, குஞ்சுகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்று கோட்டையூா் அருகே வனப் பகுதியில் உள்ள வற்றாத நீா் நிலையில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT