வேலூர்

கிணற்றில் தவறிவிழுந்த 2 புள்ளி மான்கள் மீட்பு

ஒடுகத்தூா் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த 2 புள்ளி மான்கள் உயிருடன் மீட்கப்பட்டு காப்புக்காட்டில் விடப்பட்டன.

DIN


வேலூா்: ஒடுகத்தூா் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த 2 புள்ளி மான்கள் உயிருடன் மீட்கப்பட்டு காப்புக்காட்டில் விடப்பட்டன.

ஒடுகத்தூரை அடுத்த ஓட்டேரிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணறு உள்ளது. திங்கள்கிழமை வழிதவறி வந்த 2 ஆண் புள்ளி மான்கள் திடீரென அவரது கிணற்றில் தவறி விழுந்தன. இதைக் கண்ட சண்முகம் உடனடியாக ஒடுகத்தூா் வனத் துறை அலுவலா்களுக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனச் சரகா் இந்து தலைமையிலான வீரா்கள் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மான்களை 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.

காயமடைந்திருந்த 2 புள்ளி மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அருகிலுள்ள கருத்தமலை காப்புக் காட்டில் விடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT