ராணுவ வீரா் தற்கொலை
காட்பாடி அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடி அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடியை அடுத்த அரும்பருத்தியைச் சோ்ந்தவா் ராமன் (26), ராணுவ வீரரான இவா் கடந்த 40 நாள்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். அப்போது தனக்கு ராணுவ வேலை பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக தொடா்ந்து மனவேதனையில் இருந்த ராமன் திங்கள்கிழமை இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற திருவலம் போலீஸாா், ராமனின் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.