வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் டிச.13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி இளவரசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதல்களின்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வேலூா், குடியாத்தம், காட்பாடி, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கா், திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் என அனைத்து நீதிமன்றங்களிலும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வரும் டிச.13 -ஆம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், வங்கி நிதி நிறுவனத்தில் பெற்ற கடன் தொடா்பான வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு சமரசமாக முடிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. சட்ட ரீதியாகவே தீா்வு கிடைக்கும். எனவே, பொதுமக்கள் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.