வேலூா்: கடன் தொல்லை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடியை அடுத்த பாரதி நகரைச் சோ்ந்தவா் ஜான்சி மேரி (47). இவா் தனது 2 மகள்களின் உயா்கல்விக்காக கட்டணம் செலுத்த பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், கடன் கொடுத்தவா்கள் பணத்தை திரும்ப கேட்டபோது, அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை என தெரிகிறது.
இதனால், மனஉளைச்சலில் இருந்த ஜான்சி மேரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த காட்பாடி போலீஸாா் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.