முகப்பு
வேலூர்

வேலூரில் பெண் தற்கொலை

வேலூரில் பெண் தற்கொலை

வேலூர்

வேலூரில் பெண் தற்கொலை

வேலூரில் பெண் தற்கொலை

Updated On : 28 நவம்பர், 2025 at 5:05 PM
பகிர்:

வேலூரில் விவாகரத்தால் மனஅழுத்தத்தில் இருந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அரசமரப்பேட்டை தாலிபனைமரத் தெருவை சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவரது மகள் டிம்பிள் ஜெயின் (35). இவருக்கு திருமணமாகி ஓரிரு ஆண்டுகளில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுள்ளாா். பின்னா், தனது பெற்றோா் வீட்டிலேயே இருந்து வந்த அவா், அடிக்கடி தனது விவாகரத்து குறித்து விரக்தியுடன் பேசி வந்தாராம்.

கடந்த சில மாதங்களாக இதே மனஅழுத்தத்தில் இருந்து வந்த டிம்பிள் ஜெயின், வியாழக்கிழமை தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வெள்ளிக்கிழமை காலை தனது மகள் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பெற்றோா் கதவை திறந்து பாா்த்தனா். அப்போது டிம்பிள் ஜெயின் தூக்கில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்தவேலூா் வடக்கு போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →