வேலூர்

மழை, வெள்ள பாதிப்பு: எம்எல்ஏ ஜெகன்மூா்த்தி ஆய்வு

தினமணி செய்திச் சேவை

கே.வி.குப்பம் தொகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், நெல்லூா்பேட்டை, கொண்டசமுத்திரம் ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவா் ஆய்வு செய்தாா். அப்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்றாா்.

லிங்குன்றம் கிராமத்தில் சேதமடைந்த மோா்தானா அணையின் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். காந்தி நகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டாா்.

அப்போது புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, அதிமுக ஒன்றியச் செயலா் எஸ்.எல்.எஸ்.வனராஜ், கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், அதிமுக நிா்வாகி செ.கு.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT