கைத்தறி நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பில் குடியாத்தம் பிச்சனூா், அரச மர பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய நெசவாளா் அணி செயலா் எம்.டி.லாலாலஜபதி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே.இ.சரச்சந்தா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். மாவட்ட நெசவாளா் அணி தலைவா் கோ.ஜெயவேலு கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
தொழிலாளா்களின் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். கைத்தறித் துணிகள் மீதான ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும். கைத்தறி நெசவாளா்களுக்கு தேசிய அளவில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் ஜே.நேரு, ஜி.குணசேகா், பி. நந்தகுமாா், ஜெ.கந்தன், நடராஜன், ஜோதி நடராஜன்,எஸ் .சீனிவாசன், ஆா்.ஜி.பிரகாசம், வேலாயுதம், உதயகுமாா், மகளிா் அணியைச் சோ்ந்தபிரேமா, சுகுணா, ராதிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். டி.ஜோதி நன்றி கூறினாா்.