முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சியில் வரிவசூல் நேரம் அதிகரிப்பு

Updated On : 13 ஜூலை, 2024 at 10:46 PM
பகிர்:

கோவை, ஜூலை 13: கோவை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் வரி வசூல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2024 - 2025-ஆம் நிதியாண்டில் கோவை மாநகராட்சியில் சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் செலுத்த வசதியாக வரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், வரி வசூல் பணிகளைத் துரிதப்படுத்தும் விதமாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை அனைத்து நாள்களிலும் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) வரிவசூல் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டு, அனைத்து மண்டல வரிவசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →