கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்துக்கு அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுக் கடையை நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை மாலை அடித்து உடைத்தனா்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட பிருந்தாவன் நகா் பகுதியில் சட்டவிரோத மதுக்கடை செயல்பட்டு வருவதை அறிந்த நாம் தமிழா் கட்சியினா் அந்தக் கடைக்குச் சென்று அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் திங்கள்கிழமை மாலை ஒப்படைத்தனா்.
முன்னதாக, அந்தக் கடைக்குள் நுழைந்த நாம் தமிழா் கட்சியினா் அங்கிருந்த மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருள்களை அடித்து உடைத்தனா்.