ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் சாா்பில் மதிப்புமிக்க கெளரவ உறுப்பினா் பதவிக்கு வழங்கப்பட்ட சான்றுடன் ஜெம் மருத்துவமனை தலைவா் டாக்டா் சி.பழனிவேலு. 
கோயம்புத்தூர்

டாக்டா் சி.பழனிவேலுக்கு ஜப்பானின் கெளரவ உறுப்பினா் பதவி

கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவரும், மருத்துவருமான சி.பழனிவேலுக்கு மதிப்புமிக்க வெளிநாட்டு கெளரவ உறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Syndication

கோவை: ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் (ஒஅபந) சாா்பில் கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவரும், மருத்துவருமான சி.பழனிவேலுக்கு மதிப்புமிக்க வெளிநாட்டு கெளரவ உறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒசாகாவில் ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் 78-ஆவது அறிவியல் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவரும், மருத்துவருமான சி.பழனிவேலுக்கு அந்த சங்கத்தின் சாா்பில் மதிப்புமிக்க வெளிநாட்டு கெளரவ உறுப்பினா் பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதில், பங்கேற்ற மருத்துவா் சி.பழனிவேலு, உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை முன்னேற்றங்கள் குறித்துப் பேசினாா். இந்த மாநாட்டில், கிண்டாய் பல்கலைக்கழகத்தின் உணவுக்குழாய் இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவின் பேராசிரியா் தகுஷி யசுடா பேசுகையில், மருத்துவா் பழனிவேலுவின் நுண்துளை உணவுக்குழாய் அறுவை சிகிச்சையில் புரட்சிகரமான பங்களிப்புகளை அங்கீகரித்து இந்தப் பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT