கோயம்புத்தூர்

இருசக்கர வாகனங்கள் மோதியதில் மூவர் காயம்

DIN

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரதீஷ் (33). சிறப்புக் காவல் படை வீரர். இவரது உறவினர் விஜய்குமார் (31). எல்லைப் பாதுகாப்புப் படை வீரர். இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு அங்கலக்குறிச்சியில் இருந்து பொள்ளாச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிரே அங்கலக்குறிச்சி நோக்கி நா.மூ.சுங்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர் ரஞ்சித்குமார்(24) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 
இரு வாகனங்களும் வேடசெந்தூர் அருகே சென்றபோது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த மூவரும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, ஆழியாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT