டெங்கு பாதிப்பைத் தமிழக அரசு தடுக்கத் தவறியதாகக் கூறி தேமுதிக சார்பில் கோவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் காட்டன் செந்தில் தலைமை வகித்தார்.
இதில், தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது.
கோவை மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றக் கோரியும், சாக்கடைகளைப் பராமரிக்கவும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆனந்தன், லிங்கம், செந்தில்குமார் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.