கோயம்புத்தூர்

நெகமம் அருகே விபத்து: இரு இளைஞர்கள் சாவு

DIN

நெகமம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் அடிபட்டு உயிரிழந்தனர்.
  திருப்பூரைச் சேர்ந்தவர் பசீர் மகன் முகமதுஹரிஷ் (17),  அதே ஊரில்  வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் இப்ராஹிம்ஷா மகன் ரியாஸ்கான் (17). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
  இந்நிலையில்,  இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வால்பாறை சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது,  காட்டம்பட்டி அருகே கள்ளிமடைப் பிரிவு பகுதியில் இந்த இருசக்கர வாகனம் மீது எதிரே வந்துகொண்டிருந்த லாரி மோதியது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த நண்பர்கள் இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
  இது குறித்து நெகமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT