பொதுப் பணித் துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
பணி நிரந்தரம் செய்ய பொதுப்பணித் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
பணி நிரந்தரம் செய்ய பொதுப்பணித் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
சோலையாறு அணை, நீராறு அணை உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித் துறையில் 35 ஊழியர்கள் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். நாங்கள் அணைப் பராமரிப்பு, தூர்வாரும் பணி, பூங்கா பராமரிப்பு, ஓட்டுநர் பணி, நீர்மட்டம் அளவீடு போன்ற பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம். இரவு, பகல் பாராமல், 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நாங்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பலன் அளிக்கவில்லை. எனவே பொதுப்பணித் துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.