கோயம்புத்தூர்

அவினாசிலிங்கம் நினைவு சொற்பொழிவு

DIN

கோவை அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பில் தி.சு.அவினாசிலிங்கத்தின் 27 ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.
 திருச்சிற்றம்பலம் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் கே.வி.திருமால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.  பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் குழந்தைவேல் சிறப்புரையாற்றினார். முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராமகிருஷ்ண கோயிலில் இசைத் துறை மாணவிகளின் கூட்டுப் பிரார்த்தனையும், இதைத் தொடர்ந்து நினைவு மண்டபத்தில் உள்ள அவினாசிலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. 
பல்கலைக்கழக துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் கெளசல்யா உள்ளிட்ட நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT