கோயம்புத்தூர்

வால்பாறை - சாலக்குடி இடையே அரசுப் பேருந்து இயக்க கோரிக்கை

DIN

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி இடையே மீண்டும் அரசுப் பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து சென்று கொண்டிருக்கும்போது மலைப்பாதையில் விபத்துக்குள்ளனது. அதன்பிறகு இந்தப் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது.  வழித்தட உரிமம் இருந்தும் மீண்டும் பேருந்து இயக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளாமல் உள்ளனர். இதனிடையே தற்போது வால்பாறையில் இருந்து காலை 7.30 மணிக்கு சாலக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு பேருந்தை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT