கோயம்புத்தூர்

உணவக உரிமையாளர் வீட்டில் ரூ. 1 லட்சம் திருட்டு

DIN

கோவையில் உணவக உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மற்றும் 1 பவுன் நகையை மர்ம நபர்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனர். 
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: கோவை சுங்கத்தை அடுத்த சிவராம் நகரைச் சேர்ந்தவர் சிவபாலன் (50). இவர், ரயில் நிலையம் அருகே உணவகம் நடத்தி வருகிறார். இவர், துணி எடுப்பதற்காக குடும்பத்துடன் திங்கள்கிழமை டவுன்ஹால் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைத் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம், 1 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  
இதுகுறித்து சிவபாலன் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
இந்தப் புகாரின் பேரில் ராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT