கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உலக மனநல நாள் அனுசரிப்பு
கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை, கே.எம்.சி.எச். மருத்துவமனையில் நடைபெற்ற உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மனநல மருத்துவர் டி.சீனிவாசன் வரவேற்றார். மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி, துணைத் தலைவர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, மருத்துவ இயக்குநர் டாக்டர் ஏ.என்.முருகன், மனநல மருத்துவர் சித்ரா ஜெயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுகிசிவம் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது: ஒருவரது மன நிலைக்கும் உணர்வுகளுக்கும் அவர்களே காரணம். நாம் மனதின் வசம் செல்லக் கூடாது. மனதை நம் வசப்படுத்த வேண்டும். உடல் நலம் சரியில்லா விட்டால்தான் ஒருவர் பாதிக்கப்படக் கூடும். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டால் அவரது குடும்பம் முதல் சமுதாயம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் மனநலம் பேணுவது அவசியமாகிறது. பரபரப்பான வாழ்க்கை முறையில், நல்ல ஓய்வும், ஓய்வின்றி சுழலும் எண்ணங்களை கொண்ட மனிதன் நலம் பேணவே உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் உலக மனநல நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்றார்.