கோயம்புத்தூர்

கனரா வங்கி சார்பில் வழிகாட்டு முகாம்

DIN

கனரா வங்கியின் கூடலூர் கவுண்டம்பாளையம் கிளை சார்பில் சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர் கடன் பெறுவதற்கான வழிகாட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வங்கிக் கிளை முதன்மை மேலாளர் கிரிதரன் வரவேற்றார். வங்கியின் கோவை மண்டல துணைப் பொதுமேலாளர் ஆர்.சக்ரவர்த்தி தலைமை வகித்து பொதுத் துறை வங்கிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கடன் பெறும் முறை, ஜி.எஸ்.டி. சார்ந்த கடன்கள், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் கடன்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட சிறு குறு தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். கனரா வங்கி மேலாளர் அசோகன் நன்றி கூறினார். முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT