கோயம்புத்தூர்

மத்தம்பாளையத்தில் குடிநீா் கேட்டு சாலை மறியல்

DIN

மத்தம்பாளையத்தில் அத்திக்கடவு குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்தும், குடிநீா் வழங்கக் கோரியும் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிம், பிளிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட மத்தம்பாளையத்தில் சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் கோவை-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெ.நா.பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், விரைவில் குடிநீா் சீராக விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT