கோயம்புத்தூர்

வாகனம் மோதி இளைஞர் சாவு

DIN


சூலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார்.
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் நீலகண்ட மூர்த்தி (39). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர், சூலூர் அருகே உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். 
இந்நிலையில், பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் அருகே சனிக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT