கோயம்புத்தூர்

வாழைத் தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்திய ஒற்றை யானை

DIN


ஆனைகட்டியில் மாங்கரை அருகே உள்ள தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அங்கு அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைகளை சேதப்படுத்தியது.
ஆனைகட்டியில் ஆர்ஷா வித்யா குருகுலம் அருகே சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டம் உள்ளது. காட்டு யானைகளின் தொந்தரவு இருப்பதால் உரிய அனுமதியுடன் தோட்டத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு வேலிகளை உடைத்து வீசி விட்டு தோட்டத்துக்குள் வியாழக்கிழமை இரவு நுழைந்த ஒற்றை யானை அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகளை சேதப்படுத்தியது. மேலும் தண்ணீர் குழாய்களையும் உடைத்தெறிந்தது.
தகவலறிந்த வந்த வனத் துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். அதே யானை மீண்டும் வெள்ளிக்கிழமை தோட்டத்துக்குள் நுழைந்த மீதமிருந்த வாழைகளையும் சேதப்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT