கோயம்புத்தூர்

வாகன பேட்டரி விற்பனைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு

கோவையில் பேட்டரி கடையின் பூட்டை உடைத்து ரூ. 4 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

DIN

கோவையில் பேட்டரி கடையின் பூட்டை உடைத்து ரூ. 4 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை, ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஜலால் (55). இவர் திருச்சி சாலையில் வாகன பேட்டரி விற்பனைக் கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை இரவு வியாபாரம் முடித்து வீடு திரும்பியுள்ளார். 
இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் கடைக்குச் சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 4 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து ஷேக் ஜலால் அளித்தப் புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT