வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை, கணபதி அருகே காந்தி மாநகரைச் சேர்ந்தவர் தேவானந்தன் (51). இவர் அதே பகுதியில் பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், ஜனவரி 14 ஆம் தேதி குடும்பத்துடன் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திங்கள்கிழமை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.ஒரு லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தேவானந்தன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.