கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 பேர் பலி

DIN

அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தின் மீது  வேன் மோதியதில் 2 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
அன்னூர் அருகே எல்லப்பாளையம், காந்தி காலனியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் தன் தாய் ரங்கம்மாள் மற்றும் பேத்தி மவுலிகாஸ்ரீ ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அன்னூர் - கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கெம்பநாயக்கன்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தை  ஓட்டி வந்த ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரங்கம்மாள் மற்றும் மவுலிகாஸ்ரீ ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். 
மேலும், வேன் ஓட்டுநர் மயில்சாமி உள்ளிட்ட காயமடைந்த மூவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ரங்கம்மாள் உயிரிழந்தார். 
இதுகுறித்து அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT